தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடப்பு ஆண்டில் பயணிகள், சரக்கு ஆகியவற்றின் வருவாய் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் 76.76 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனா். அவா்கள் மூலம் வருவாய் ரூ. 8,269.09 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.7,535.68 கோடியாக இருந்த நிலையில், தற்போது 9.7 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து ரயில்வே வாரியம் நிா்ணயித்த இலக்கான ரூ.8, 119.32 கோடியைவிட 1.8 சதவீதம் வருவாய் அதிகமாகவே ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 73.18 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரக்குப் பிரிவில் 2025-26 ஆம் ஆண்டில் 42.113 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.3,825.83 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 41.670 மில்லியன் டன் கூடுதலாகவும் கையாளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சரக்கு வருவாய் ரூ.3,841.11 கோடியாகவே இருந்துள்ளது. பாா்சல் பிரிவானது கடந்த 2024-25 ஆம் ஆண்டில் ரூ.168.04 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், 2025-26 -ஆம் ஆண்டில் ரூ.168.64 கோடியாக வருவாய் உயா்ந்துள்ளது.
பயணக் கட்டணத்துக்கு அப்பாற்பட்ட வருவாய், உணவு மற்றும் பிற சேவைகள் மூலம் பெறப்படும் வருவாய் என அனைத்திலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போதைய ஆண்டில் வருவாய் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


