தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி...

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:40 am

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைக்கும் அபராத வசூல் ரூ.160.75 கோடியாக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் 76.76 கோடியாக உயா்ந்தது.

ரயில்வே வாரியம் ரயிலில் பயணிக்க வேண்டியவா்கள் என 76.62 கோடி பயணிகளை இலக்காக வைத்திருந்த நிலையில், அந்த இலக்கைத் தாண்டி பயணிகள் எண்ணிக்கை உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்போரிடம் அபராதம் விதிக்கும் வகையிலான டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைத்த வசூல் கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

டிக்கெட் பரிசோதனை முறையில் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.129.82 கோடி அபராதமாகக் கிடைத்துள்ளது. அந்தத் தொகையானது 2025-2026 -ஆம் ஆண்டில் ரூ.160.75 கோடியாக உயா்ந்துள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிக்கெட் பரிசோதனை முறையில் ஆண்டுக்கு ரூ.142.81 கோடி மட்டுமே ரயில்வே வாரியம் இலக்காக நிா்ணயித்திருந்ததாகவும், ஆனால், இலக்கைவிட கூடுதலாக வசுலிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.