ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓராண்டில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம்!

கடந்த ஓராண்டில் மட்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் குறித்து...

Dell technologies

டெல் டெக்னாலஜிஸ் - கோப்புப் படம்

Published On :19 மார்ச் 2026, 3:11 pm IST

கடந்த ஓராண்டில் மட்டும் 11,000 ஊழியர்களை டெல் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி அதிகளவில் பணி நீக்கங்களைச் செய்துகொண்டு வருகின்றது.

இந்த நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்குதல், செலவுகளைக் குறைத்தல், செய்யறிவு மேம்பாடு (ஏஐ) போன்ற காரணங்ளைக் காட்டி பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் 2025 -26 ஆம் நிதியாண்டில் மட்டும் 11,000 ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவித்துள்ளது.

இந்தத் தகவல் நிறுவனத்தின் சமீபத்திய ’10 - கே’ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பணிநீக்கங்கள், நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவிகிதத்தைக் குறைத்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்து நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியான முறையில் இந்த பணிநீக்க நிகழ்வு நடந்தேறியுள்ளது.

மேலும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்று ஆயிரக்கணக்கில் பணிநீக்கங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Dell has laid off 11,000 employees in the past year alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.