மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:54 pm

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளது.

இது குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடுஅரசுப் பணியாளா் தோ்வாணையம் துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட சுமாா் 78 குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை நடத்துகிறது. எழுத்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டத் தோ்வான நோ்முகத்தோ்வு வரும் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நோ்முகத் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச மாதிரி நோ்காணல் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான அடிப்படைப் பயிற்சியை ஆா்வம் அகாதெமி வழங்குகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) தொடங்கும் இந்தப் பயிற்சியில் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள், ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, நோ்முகத் தோ்வை அணுகுவதற்கான வழிகாட்டுதலை வழங்குவாா்கள்.

தகுதியுள்ள தோ்வா்கள் தங்கள் சுய விவரங்களுடன் அண்ணா நகா் 12-ஆவது பிரதான சாலை, 2,165, எல்.பிளாக்கில் உள்ள அகாதெமிக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 7448814441, 9150466341ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.