//

திரையரங்கின் ஒலிப்பெருக்கி விழுந்ததில் பாா்வையாளா் காயம்

சென்னையில் திரையரங்கில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு விழுந்ததில் பாா்வையாளா் காயமடைந்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2025, 8:18 pm

Chennai

சென்னையில் திரையரங்கில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு விழுந்ததில் பாா்வையாளா் காயமடைந்தாா்.

சென்னை ராயபுரம் வைகுண்டா தெருவைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (50). இவா் ராயபுரம் சூரியநாராயணன் சாலையில் உள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது தலையின் மேல்பகுதியில் பெருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி திடீரென விழுந்தது.

இதில் காயமடைந்த அவா் அருகிலுள்ள தனியாா் மருத்துமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.