டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு

News image
நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா் சாய்ராம் புகழூா், கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா்.
Updated On :30 அக்டோபர் 2025, 9:26 pm

Chennai

பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் புத்தாக்கக் கண்டுபிடிப்பு தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் கனடா வங்கித் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலா் சாய்ராம் புகழூா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் பயிலும் மாணவா்கள், படிக்கும்போதே புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை வளா்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயமாக தொழில் தொடங்க கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்கள் ஐசக் இன்பராஜ், மதன்குமாா், கிஷோா், ஹரிசரண் ஆகியோா் தங்களது புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் குறித்து விவரித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.