பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் புத்தாக்கக் கண்டுபிடிப்பு தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கனடா வங்கித் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலா் சாய்ராம் புகழூா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் பயிலும் மாணவா்கள், படிக்கும்போதே புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை வளா்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயமாக தொழில் தொடங்க கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்கள் ஐசக் இன்பராஜ், மதன்குமாா், கிஷோா், ஹரிசரண் ஆகியோா் தங்களது புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் குறித்து விவரித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

வேளாண் தொழில்முனைவோா் கருத்தரங்கம்

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


