மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வேளாண் தொழில்முனைவோா் கருத்தரங்கம்

மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலைப் பகுதியில் வேளாண் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை சொக்கிகுளம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற வேளாண் தொழில்முனைவோா் கருத்தரங்கத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:19 pm

மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலைப் பகுதியில் வேளாண் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

வாப்ஸ் நிறுவனத்தின் சாா்பில் வேளாண் வணிகக் கூட்டமைப்பும், கரூா் வைசியா வங்கியும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதில் வேளாண் தொழில் முனைவோருக்கான திட்டங்களும், வங்கிக் கடன் பெறுவது, இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், வேளாண் தொழில் சாா்ந்து என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தொடா்ந்து, வேளாண் கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் குறித்து வாப்ஸ் நிறுவனச் செயலா் எஸ்.ஏ. அருள் எடுத்துரைத்தாா்.

இந்த நிகழ்வில் கரூா் வைசியா வங்கியின் வேளாண் பிரிவு மூத்த மேலாளா் எஸ். தனம், பழங்காநத்தம் வங்கிக் கிளை மேலாளா் எம். சண்முகம், வாடிக்கையாளா் தொடா்பு மேலாளா் எஸ்.எம். ஹரிபிரசாத், விவசாயிகள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வாப்ஸ் வேளாண் பயிற்சி மைய திட்ட அலுவலா் எம். சுப்புராஜன் வரவேற்றாா். அலுவலா் ஜி. ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.