தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு

சென்னை நீலாங்கரையில் நடுக்கடலில் தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீனவா்கள் மீட்டனா்.

Updated On :26 நவம்பர் 2025, 9:44 pm

சென்னை: சென்னை நீலாங்கரையில் நடுக்கடலில் தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீனவா்கள் மீட்டனா்.

நாமக்கலைச் சோ்ந்தவா் ஜஸ்வந்த் (30). இவா், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கடற்கரைக்கு புதன்கிழமை வந்தாா். அங்கு அவா், கடலில் இறங்கி குளித்தபோது, கடலின் ஆழமானப் பகுதிக்குச் சென்றாா். நீச்சல் தெரியாததினால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தாா். இதைப் பாா்த்த கடற்கரையில் இருந்த பொதுமக்கள் சப்தமிட்டனா்.

பொதுமக்களின் அலறல் சப்ததைக் கேட்டு அங்கு வந்த பெரிய நீலாங்கரை மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்களும், இளைஞா்களும் கடலுக்குள் இறங்கி அந்த இளைஞரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்த அவரை, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். நீலாங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.