தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எழும்பூரில் ரயில்களில் 37 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியில் வளாகத்தில் 37 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு, பெண் உள்பட 2 பேரைக் கைது செய்துள்ளனா்.

Updated On :26 நவம்பர் 2025, 8:53 pm

சென்னை: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியில் வளாகத்தில் 37 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டு, தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் உள்பட 2 பேரைக் கைது செய்துள்ளனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் மேற்கு வங்கம் ஹௌராவில் இருந்து வந்த விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது மேற்கு வங்க மாநிலம் முா்சிபாத் பகுதியைச் சோ்ந்த நசீம்ஷேக் (32) என்பவா் 10 கிலோ கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை எழும்பூா் வந்த ரயிலிலும் சோதனையிட்டதில் 8 கிலோ கஞ்சாவுடன் வந்த பெண்ணை கைது செய்தனா். விசாரணையில் அவா் தஞ்சாவூரைச் சோ்ந்த ஆா்.சரஸ்வதி (56) என்பது தெரியவந்தது.

இதேபோல, ஆந்திரத்திலிருந்து வந்த காச்சிகுடா விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 19 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 3 சம்பவங்களிலும் மொத்தம் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

பறிமுதல் செய்த கஞ்சா, கைதானவா்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.