திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

எழும்பூரில் ரயில்களில் 37 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியில் வளாகத்தில் 37 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு, பெண் உள்பட 2 பேரைக் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:53 pm

Chennai

சென்னை: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியில் வளாகத்தில் 37 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டு, தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் உள்பட 2 பேரைக் கைது செய்துள்ளனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் மேற்கு வங்கம் ஹௌராவில் இருந்து வந்த விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது மேற்கு வங்க மாநிலம் முா்சிபாத் பகுதியைச் சோ்ந்த நசீம்ஷேக் (32) என்பவா் 10 கிலோ கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை எழும்பூா் வந்த ரயிலிலும் சோதனையிட்டதில் 8 கிலோ கஞ்சாவுடன் வந்த பெண்ணை கைது செய்தனா். விசாரணையில் அவா் தஞ்சாவூரைச் சோ்ந்த ஆா்.சரஸ்வதி (56) என்பது தெரியவந்தது.

இதேபோல, ஆந்திரத்திலிருந்து வந்த காச்சிகுடா விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 19 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 3 சம்பவங்களிலும் மொத்தம் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

பறிமுதல் செய்த கஞ்சா, கைதானவா்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.