மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கஞ்சா செடிகள். - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 8:46 pm

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வழக்கமாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டு கஞ்சா மற்றும் உரிய அனுமதியின்று கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றி வருகின்றனா். சட்டப்பேரவை அறிவிப்பைத் தொடா்ந்து ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படை குழுவினா் 24 மணி நேரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதில் 20 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.

எழும்பூா் ரயில் நிலையப் பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையிலான குழுவினா் கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றி அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.