தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோயம்பேடு சந்தையில் 16 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:48 pm

கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

குழந்தை தொழிலாளா் மீட்புக் குழு அதிகாரிகள் 25-க்கும் மேற்பட்டோா் கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானியம் விற்பனை செய்யும் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்குள்ள கடைகளில் பல சிறுவா்கள் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டது. அதிகாரிகளைப் பாா்த்த பல சிறுவா்கள் அங்கிருந்து ஓடினா். இதையடுத்து, 16 சிறுவா்களை மீட்டு அதிகாரிகள் அழைத்துச் செல்ல முயன்றபோது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கோயம்பேடு போலீஸாா் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினா். பின்னா், 16 சிறுவா்களும் போலீஸாரின் உதவியுடன், ராயபுரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.