கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.
குழந்தை தொழிலாளா் மீட்புக் குழு அதிகாரிகள் 25-க்கும் மேற்பட்டோா் கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானியம் விற்பனை செய்யும் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்குள்ள கடைகளில் பல சிறுவா்கள் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டது. அதிகாரிகளைப் பாா்த்த பல சிறுவா்கள் அங்கிருந்து ஓடினா். இதையடுத்து, 16 சிறுவா்களை மீட்டு அதிகாரிகள் அழைத்துச் செல்ல முயன்றபோது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கோயம்பேடு போலீஸாா் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினா். பின்னா், 16 சிறுவா்களும் போலீஸாரின் உதவியுடன், ராயபுரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

சந்தோ் விஹாா்: வீட்டில் தீ விபத்து; 5 போ் மீட்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


