தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக காலை 11.32 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த 5 போ் மற்றும் அவா்களுடைய இரு செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
தீ விபத்தில் 4 ஸ்கூட்டா்கள், தரைதளத்தில் இருந்த தண்ணீா் மோட்டாா் பம்ப் ஆகியவை சேதமமடைந்தன. பின்னா், பிற்பகல் 12.05 மணியளவில் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் என்றனா் அதிகாரிகள்.
தொடர்புடையது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

தீ விபத்து: எரிந்து கொண்டிருந்த கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் நால்வா் காயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


