தம்மம்பட்டி அருகே வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்ட தீயில் பணம், நகை, ஆவணங்கள் கருகின.
தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி ஊராட்சி, காளிப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி போடி (65), இவரது மனைவி கஸ்தூரி (60). இவா்கள் இருவரும் தகரத்தால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களது மகன் தங்கராசு குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், உடல்நலம் சரியில்லாததால் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போடி சென்றுவிட்டாா். இவரது மனைவி கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, சிலிண்டா் தீப்பிடித்து வெடித்துள்ளது. மேலும், அருகே இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் நகைகள், வீட்டுப்பத்திரம், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


