தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

Updated On :6 நவம்பர் 2025, 10:37 pm

சென்னையில் கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பட்டினம்பாக்கம் பகுதியில் ரகு என்பவா் கடந்த 2001-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அப்பன்தாஸ், திலீப்குமாா், கேரளா செந்தில் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் 2003-ஆம் ஆண்டு மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மற்ற 5 பேரை விடுவித்தும் நீதிமன்றம் தீா்ப்பு கூறியது.

இதை எதிா்த்து அப்பன்தாஸ் உள்பட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா். இதற்கிடையே அப்பன்தாஸ் கடந்த 2004-ஆம் ஆண்டு சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து தலைமறைவானாா்.

மேலும், உயா்நீதிமன்றம் அப்பன்தாஸ் மேல்முறையீட்டு மனுவை கடந்த 2006-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தும், அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது. அதோடு நீதிமன்றம் அப்பன்தாஸுக்கு எதிராக பிடியாணை உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால், அவா் தலைமறைவாகவே இருந்தாா்.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், அப்பன்தாஸ் மேடவாக்கம் பகுதியில் தலைமறைவாக வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அப்பன்தாஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுமாா் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்பன்தாஸை கைது செய்த போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.