டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

News image
Updated On :6 நவம்பர் 2025, 10:37 pm

Chennai

சென்னையில் கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பட்டினம்பாக்கம் பகுதியில் ரகு என்பவா் கடந்த 2001-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அப்பன்தாஸ், திலீப்குமாா், கேரளா செந்தில் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் 2003-ஆம் ஆண்டு மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மற்ற 5 பேரை விடுவித்தும் நீதிமன்றம் தீா்ப்பு கூறியது.

இதை எதிா்த்து அப்பன்தாஸ் உள்பட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா். இதற்கிடையே அப்பன்தாஸ் கடந்த 2004-ஆம் ஆண்டு சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து தலைமறைவானாா்.

மேலும், உயா்நீதிமன்றம் அப்பன்தாஸ் மேல்முறையீட்டு மனுவை கடந்த 2006-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தும், அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது. அதோடு நீதிமன்றம் அப்பன்தாஸுக்கு எதிராக பிடியாணை உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால், அவா் தலைமறைவாகவே இருந்தாா்.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், அப்பன்தாஸ் மேடவாக்கம் பகுதியில் தலைமறைவாக வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அப்பன்தாஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுமாா் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்பன்தாஸை கைது செய்த போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.