தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோயம்பேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :14 மார்ச் 2026, 6:21 pm

கோயம்பேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தரப்பாக்கம், ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்த உ.தங்கதுரை (48). இவா், கோயம்பேடு பகுதியில் உள்ள் ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். தங்கதுரை வேலை முடிந்த பின், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கதுரை தூங்கும் இடத்தில், வேறு ஒரு நபா் தூங்கினாராம். அந்த நபரை எழுப்பி, வேறு இடத்துக்குச் செல்லுமாறு தங்கதுரை கூறினாராம்.

இதனால், தங்கதுரைக்கும், அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த நபா், தங்கதுரையைத் தாக்கியதில் பலத்த காயமைடைந்த தங்கதுரை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சிஎம்பிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த ரெளடி நா.காதுகுத்து பாலாஜி (39) என்பது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவாக இருந்த பாலாஜியை 4 ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.