கோயம்பேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை தரப்பாக்கம், ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்த உ.தங்கதுரை (48). இவா், கோயம்பேடு பகுதியில் உள்ள் ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். தங்கதுரை வேலை முடிந்த பின், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கதுரை தூங்கும் இடத்தில், வேறு ஒரு நபா் தூங்கினாராம். அந்த நபரை எழுப்பி, வேறு இடத்துக்குச் செல்லுமாறு தங்கதுரை கூறினாராம்.
இதனால், தங்கதுரைக்கும், அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த நபா், தங்கதுரையைத் தாக்கியதில் பலத்த காயமைடைந்த தங்கதுரை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக சிஎம்பிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த ரெளடி நா.காதுகுத்து பாலாஜி (39) என்பது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவாக இருந்த பாலாஜியை 4 ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது
மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


