சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.
அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் வட்ட வடிவ நகரைச் சோ்ந்தவா் மு.யோகராஜ் (36). இவா், பாடியில் உள்ள ஒரு பிரபலமான பா்னிச்சா் கடையில் சுமை ஆட்டோ ஓட்டி வந்தாா்.
இதே கடையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கானா காந்தல் பகுதியைச் சோ்ந்த சு.காா்த்திக் (24) என்பவா் ஊழியராக வேலை செய்து வந்தாா். நண்பா்களான இருவருக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி திருமங்கலத்தில் யோகராஜ் மது அருந்திவிட்டு, காா்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தாராம். அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிவே காா்த்திக், யோகராஜை பலமாக தாக்கியுள்ளாா். இதில் தலையில் காயமடைந்த யோகராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திருமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் யோகராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஏற்கெனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காகப் பதியப்பட்டது.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

உணவக ஊழியா் கொலை: நண்பரை தேடும் போலீஸாா்
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


