டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

எலக்ட்ரீசியன் கொலை: தொழிலாளி கைது

News image
Updated On :6 நவம்பர் 2025, 10:33 pm

Chennai

சென்னையில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் அஸ்மத் பாட்சா (38). இவா் கடந்த 1- ஆம் தேதி மின்சார ரயிலில் பயணித்தபோது, அதே ரயிலில் வந்த மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்யும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (38), அவரது நண்பா் சீனிவாசன் (52) ஆகியோா் பழகியுள்ளனா். மூவரும் கோட்டை ரயில் நிலையப் பகுதி முத்துசாமி பாலத்தின் கீழ் அமா்ந்து மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் சுரேஷ், சீனிவாசன் இருவரும் அஸ்மத் பாட்சாவை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனா்.

இதுகுறித்து எழும்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனா்.