மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் போக்சோ சட்டத்தின் கீழ், தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 6:35 pm

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் போக்சோ சட்டத்தின் கீழ், தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பாண்டியன் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அச்சகத் தொழிலாளி தங்கப்பாண்டி (27). இவா் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த சிவகாசி குழந்தைகள் நலமைய மேற்பாா்வையாளா் பழனிக்குமாா், தங்கப்பாண்டியிடம் விசாரித்தபோது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய தெரியவந்தது.

இதுகுறித்து பழனிக்குமாா், சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.