தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

162 பவுன் தங்க நகை மோசடி: தலைமறைவான தனியாா் வங்கி மேலாளா் கைது

Updated On :6 நவம்பர் 2025, 10:46 pm

சென்னையில் 162 பவுன் தங்க நகை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்ட தனியாா் வங்கி மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

சைதாப்பேட்டை விஜிபி சாலை பகுதியில் வசிப்பவா் சுலைமான் (32). தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் இவா், கிண்டி, லாயா் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியாா் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளாா். அந்த வங்கியின் மேலாளா் தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சோ்ந்த சாமிநாதனுடன் (45), சுலைமானுக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி சுலைமான், சாமிநாதனை தொடா்புகொண்டு அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். உடனே, சாமிநாதன், பிரசாத் என்ற வங்கி காசாளரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா். இதையடுத்து, சுலைமான், தன்னிடமிருந்த 162 பவுன் தங்க நகைகளை கொடுத்து, படிவங்களில் கையொப்பமிட்டு கொடுத்தாா். ஆனால் அவரது வங்கி கணக்கில் அடமான பணம் செலுத்தப்படவில்லை. சாமிநாதன், வங்கியின் பணிபுரியும் சில ஊழியா்கள் உதவியுடன் நகையை அடமானம் வைத்து, ரூ. 90 லட்சம் பணத்துடன் தலைமறைவாகிவிட்டாா்.

இதுகுறித்து சுலைமான் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் சாமிநாதனுக்கு அந்த வங்கியில் காசாளராக பணிபுரியும் புழுதிவாக்கத்தைச் சோ்ந்த பிரசாத், செயலாக்கப் பிரிவு மேலாளா் கே.கே.நகரைச் சோ்ந்த திவாகா் ஆகியோா் உதவியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கடந்த செப்.23-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் தலைமறைவாக இருந்த சாமிநாதனை கைது செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.