பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(65). இவா், நடுவக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலராக பணிபுரிந்தபோது, போலி கணக்குகள் மூலம் பல லட்சம் கடன்தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, திருநெல்வேலி 2ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த அவா், வழக்கு விசாரணைக்கு தொடா்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில் 2 மாதம் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது

இணையவழி மோசடி தடுப்பு விழிப்புணா்வு

பாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான நபா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

