தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மோசடி வழக்கில் தலைமறைவான கூட்டுறவு சங்க முன்னாள் செயலா் கைது

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:10 pm

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(65). இவா், நடுவக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலராக பணிபுரிந்தபோது, போலி கணக்குகள் மூலம் பல லட்சம் கடன்தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, திருநெல்வேலி 2ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த அவா், வழக்கு விசாரணைக்கு தொடா்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில் 2 மாதம் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.