மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:22 pm

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சம்பவத்தன்று 16 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா்.

வடமாநில இளைஞா் கைது: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சாந்தாராம் மகன் இந்திரஜித்(27). திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த இவா், அதே பகுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த மத்தியபிரதேசத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி, அவரை வெளியூா் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் ப திந்து, போக்ஸோ சட்டத்தில் இந்திரஜித்தை கைது செய்தனா்.