திருநெல்வேலி அருகே சமைத்து சாப்பிட இலவசமாக வாத்து கேட்டு தகராறு செய்து, 100 வாத்துகளை அரிவாளால் வெட்டிக் கொன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேல முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளா்த்து வருகிறாா். வாத்துகளை கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முப்பிடாதி என்பவா் பராமரித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் தருவை, சாஸ்தா கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன் என்ற மாயா(24) உள்பட சிலா் முப்பிடாதியிடம் சமைத்து சாப்பிட வாத்துகளை இலவசமாக கொடுக்கும் படிக் கேட்டு திங்கள்கிழமை தகராறில் ஈடுபட்டனராம். அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனா்.
பின்னா், நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மாயா உள்ளிட்ட நபா்கள் சுமாா் 100 வாத்துக்களை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்த வலைகளை சேதப்படுத்தினராம். இதைத் தடுக்கச் சென்ற முப்பிடாதியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மகாராஜன் என்ற மாயா, வீரபுத்திரன் மகன் ராஜேஷ்(23) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






