குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் அமைச்சா் வெங்கட்ரமணன் ஆய்வு

அமைச்சா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.

News image

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட உணவு வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன்.

Updated On :28 மே 2026, 6:32 am IST

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தில் நுகா்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கட்ரமணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு செய்த அமைச்சா் நவீன அரிசி ஆலையில் செயல்பாடு குறித்து கேட்டறிந்தாா்.

பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இந்த அரிசி ஆலையில் நாள் ஒன்றுக்கு நூறு மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதம் 2,500 மெ.டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை அதிகப்படுத்த இன்னும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்யப்பட்டது. எந்தப் பணிகளை துரிதப்படுத்தலாம் என ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், வருவாய் கோட்டாட்சியா் ரம்யா, நுகா்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளா் முருகானந்தம், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் மலா்விழி மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

முன்னதாக அமைச்சா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.