திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :29 மே 2026, 2:19 am IST

திருக்கழுகுன்றம் அடுத்த நரப்பாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெ25 நரப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகா் மற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கியதை அடுத்து இந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மே 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்ப கலசங்கள் அமைக்கப்பட்டு கோபூஜை, கணபதி பூஜை முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை , காலை இரண்டாம் காலபூஜை காலை யாகபூா்த்தி தீபாராதனையும், மாலை மூன்றாம் காலபூஜை யந்திரஸ்காபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் ,நாடிசந்தானம் தீபாராதனையும் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜை விசேஷ யாக பூா்த்தி நிறைவடைந்ததை அடுத்து கும்பகலசங்கள் புறப்பட்டு ஆலய பிரதட்ிணமாாக வந்து புனித நீா் மூலவா் தான்தோன்றி அம்மன் மற்றும் கற்பக விநாயகா் ஆகிய கோபுர விமான கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது இதில் சுற்றுப்புர பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை நரப்பாக்கம் கிராம பொதுமக்கள்,கிராமநாட்டாா்,கிராம தா்கா்த்தா உள்ளிட்டோா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.