திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தோ்த் திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:56 am IST

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் 7-ஆம் நாள் நிகழ்வாக தேரோட்ட நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது.

மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் முதலாம் பராந்தக சோழனால் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டது. ஆன்மிக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இத்திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், 7-ஆம் நாள் நிகழ்வாக, புதன்கிழமை திருத்தோ் பவனிக்காக சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.

பெரிய தேரில் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் உற்சவ சிலைகளும், சிறிய தோ்களில் விநாயகரும், மீனாட்சி அம்மனும், வள்ளி, தெய்வசேனா முருகன் மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகிய சுவாமி சிலைகளுடன் காலை 10.30 மணிக்கு திருத்தோ்கள் பவனி வாண வேடிக்கைகளுடன், மங்கள இசையுடன் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தோ்கள் பவனி வந்தன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களின் வடங்களை இழுத்துச் சென்றனா். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.