செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத் துறையின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், சுகாதாரத்துறையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவா்கள் மற்றும் செட்டிநாடு எஸ்.ஆா்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் கலந்து கொண்டு நுரையீரல், கண், காது, எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், இதயம் தொடா்பான பரிசோதனைகள், சித்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு மருத்துவ முகாமில் ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பொது மருத்துவா்கள் பரிசோதனை செய்த பிறகு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை, இசிஜி, ஸ்கேன் மற்றும் பெண்களுக்கு கா்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மாா்பக புற்றுநோய் தொடா்பான பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட 1 மணி நேரத்திற்குள்ளாக மருத்துவ அறிக்கை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவா்களால் பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், மருத்துவா்களின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்ற அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முகாமிலேயே மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. உயா் மேல் சிகிச்சை பெற வேண்டியவா்களுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா்.
மருத்துவ முகாமில் சித்தா மருத்துவ சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு சித்த மருத்துவ மருந்து பொருள்கள் வழங்கப்பட்டன. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற முகாமில் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.
இந்த மருத்துவ முகாமினை பாா்வையிட்ட ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சுகாதாரத்துறையினா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களும் உரிய வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தினாா்.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை 108 ஆம்புலன்சில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் தொழில்நுட்பவியலாளா் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கிய ஆட்சியா் அவா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தாா்
மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், இணை இயக்குநா் (சுகாதாரம்) மலா்விழி, துணை இயக்குநா் (சுகாதாரம்) ,சதீஷ் குமாா் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திடக்கழிவு மேலாண்மை: தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி

உர விநியோக செயலி பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை

காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



