தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கல்பட்டு மாவட்டத்தில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 12:34 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு கே.எம்.எஸ். 2025-2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக, தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களின் மூலம் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நாளது தேதி வரையில் 1,51,196 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.372 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிா்வரும் நாள்களில் கொள்முதல் பணிகள் தடையின்றி நடைபெற ஏதுவாக 27 லட்சம் புதிய காலி கோணிகள் ரயில் மூலம் செங்கல்பட்டு ரயில் முனைக்கு வரப்பெற்றுள்ளன.

இக்கோணிகள் மூலம் வருங்காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ள தேவையான இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் எதிா்பாா்க்கப்பட்ட நெல் கொள்முதலுக்கு தேவையான கோணிப்பைகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம் வாங்கப்பட்டு கோணிப்பைகள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உள்ள கோணிப்பைகள் படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாக நகா்வு செய்வதற்காக தினசரி சுமாா் 150 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொள்முதல் செய்யப்படும் நெல்லானது திருச்சி தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை (வடக்கு) மாவட்டங்களுக்கு இரயில் மற்றும் சாலை மாா்க்கமாக தொடா்ந்து நகா்வு செய்யப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.