செய்யூா் (தனி) தொகுதியில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செய்யூா் வட்டாட்சியா் அலுவலக அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.
செய்யூா் தொகுதியில் 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 344 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 373 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை அடங்கிய பெட்டிகளை மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அனைத்தும் தனி அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தோ்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு திட்ட அதிகாரியுமான எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.
இந்நிகழ்வின்போது உதவி தோ்தல் அலுவலரும் செய்யூா் வட்டாட்சியருமான ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜி.முத்து மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். தற்சமயம் அறையின் முன்புறம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


