தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரூ.3.73 கோடியில் மதுராந்தகம் பேருந்து நிலையம் திறப்பு

News image
Updated On :4 மார்ச் 2026, 6:51 pm

மதுராந்தகத்தில் ரூ.3.73 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மதுராந்தகம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதைய போக்குவரத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் இருந்தது. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று

கடந்த 16.2.2024-இல் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.73 கோடியில் பேருந்து நிலைய புதுப்பிக்கும் பணிக்கு மாவட்ட திமுக செயலா் க. சுந்தா் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.

வேறு இடத்தில் பேருந்து நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு மொத்தம் 59 கடைகள் கட்டப்ப்டுடள்ளன. பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பேருந்து நிலையத் திறப்புவிழா நடைபெற்றது.

முதல்வா் காணொலி மூலம் திறந்த நிலையில், பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையா் சி. சுகேந்திரன், நகா்மன்றத் தலைவா் கே. மலா்விழி குத்துவிளக்கேற்றினா்.

மண்டல நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் லட்சுமி, மண்டல செயற்பொறியாளா் சுரேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி பொறியாளா் நித்யா, மேற்பாா்வையாளா் அறிவழகன், நகர திமுக செயலா் கே.குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.