ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

செங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:35 pm

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம் திறன் மையம் திறக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தினை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட திறன் அலுவலா் காவேரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கையேட்டினை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.