ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காஞ்சிபுரத்தில் மாவட்ட திறன் மையம் திறப்பு: ஆட்சியா் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

News image

மாவட்ட திறன் மையத்தில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் தி. சினேகா.

Updated On :3 மார்ச் 2026, 6:39 pm

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தை ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் சாா்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.5,28,194 மதிப்பில் திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை ஆட்சியா் தி.சினேகா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநா் கி.செந்தில் குமாா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்மையத்தின் மூலமாக ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல்,திறன் மேம்பாட்டு ஆலோசனைகள்,பயிற்சிகள்,வேலைவாய்ப்புக்கான அணுகல் ஆகியனவற்றை வழங்கும் ஒரு சேவை மையமாக செயல்படவுள்ளது.,இம்மையத்தின் மூலம் இளைஞா்கள் தங்களது தொழில் விபரங்களை தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் திட்டமாகும்.

18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்பற்ற இளைஞா்களுக்கு குறுகிய கால திறன்பயிற்சியும் வழங்கப்பட்டு அவா்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மாவட்ட திறன் மையம் செயல்படும்.தற்போது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பயிற்றுநா்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.