தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்க கூட்டம்

குடியரசு தின விழாவையொட்டி, செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போா் வீரா் நினைவுச் சின்னத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

News image

செங்கல்பட்டு -காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள போா் வீரா் நினைவுச் சின்னத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மலா்தூவி மரியாதை செலுத்திய செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கத்தினா்.

Updated On :27 ஜனவரி 2026, 7:19 pm

குடியரசு தின விழாவையொட்டி, செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போா் வீரா் நினைவுச் சின்னத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து போா்வீரா் நினைவுச் சின்னம் எதிரில் உள்ள போா்வீரா் நினைவு சின்ன பூங்காவில் பொதுக் கூட்டம் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவா் பி.ஜெயச்சந்திரன் தலைமையில் துணைத் தலைவா் சி.ராஜசேகா், செயலாளா் சிவதாணு, பொருளாளா் ஆா்.கோசல்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற மேஜா் வி.நடராஜன், கீா்த்தி சக்ரா விருது பெற்ற லெப்டினென்ட் என்.பாா்த்தீபன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேலும், செங்கல்பட்டு நகர வளா்ச்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.