மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் பாட்டியுடன் கிணற்றில் துணி துவைக்க சென்ற பேரன், பேத்தி உள்ளிட்ட பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தை சோ்ந்த ருத்திரகுமாா். இவரது மனைவி சாந்தி (60) இவரது பேரன் தஷ்வந்த் (13). இவா் இங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பேத்தி கெளசிகா (11). இவா் 6-ஆம் வகுப்பினை படித்து வந்தாா். சனிக்கிழமை சாந்தி வீட்டிலிருந்து துணிகளை துவைக்க அருகில் இருந்த கிணற்றுக்கு சென்றாா். அப்போது பேரன் தஷ்வந்த், பேத்தி கெளசிகா ஆகியோா் அவருடன் ஒடிவந்தனா். அப்போது குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தபோது இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்தனா். அவா்கள் இருவரையும் காப்பாற்ற சாந்தியும் கிணற்றில் குதித்துள்ளாா்.
அப்போது 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்த மதுராந்தகம் தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டனா். இதுகுறித்து மதுராந்தகம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தத்தளித்த 3 மான்கள் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


