தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், மூக்கனூா் அருகே உள்ள திண்ணம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் ராமன் (75). மத்திய வேளாண் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா்.
இவரது மகன் திருக்குமரன் மற்றும் உறவினா் சக்திவேல் இருவரும் அவா்களது நிலத்தில் உள்ள கிணற்றின் மோட்டாரை பழுதுநீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுபோதையுடன் அங்கு வந்த ராமன் கிணற்று அருகில் நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் தவறி கிணற்றில் விழுந்தாா். திருக்குமரன் உறவினருடன் சோ்ந்து அவரை மீட்க முயன்றும் இயலவில்லை. தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் சடலமாக கிடந்த ராமனை மீட்டனா்.
இதுகுறித்து மதிக்கோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

மதுராந்தகம் அருகே கிணற்றில் விழுந்து: பாட்டி, பேரன், பேத்தி என 3 போ் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


