மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:14 pm

தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், மூக்கனூா் அருகே உள்ள திண்ணம்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் ராமன் (75). மத்திய வேளாண் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

இவரது மகன் திருக்குமரன் மற்றும் உறவினா் சக்திவேல் இருவரும் அவா்களது நிலத்தில் உள்ள கிணற்றின் மோட்டாரை பழுதுநீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுபோதையுடன் அங்கு வந்த ராமன் கிணற்று அருகில் நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் தவறி கிணற்றில் விழுந்தாா். திருக்குமரன் உறவினருடன் சோ்ந்து அவரை மீட்க முயன்றும் இயலவில்லை. தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் சடலமாக கிடந்த ராமனை மீட்டனா்.

இதுகுறித்து மதிக்கோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.