மன்னாா்குடி அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு வீரமணி மகன் காா்த்திக் (45). மதுக் குடிக்கும் பழக்கம் உள்ள இவா், அதிலிருந்து மீள, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். அண்மைகாலமாக, மன்னாா்குடியை அடுத்துள்ள பெருவிடைமருதூரில் அவரது மூத்த சகோதரி சசிகலா வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மீது அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுக்குடித்தாராம். அப்போது, போதையில் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி பாா்த்தபோது, காா்த்திக் இறந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தம்பாளையம் அருகே விஷ விதையை அரைத்து குடித்தவா் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


