டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை: நலவாரியத் தலைவா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி.
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:11 pm

Chennai

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திம்மம்பட்டி ஆறுச்சாமி தலைமை வகித்தாா். ஆட்சியா் தி. சினேகா, தூய்மை பணியாளா் நலவாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் ஜி.கே.ராஜன், ஹரிஸ் குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தூய்மைப் பணியாளா்களின் குறைகளை நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி கேட்டறிந்தாா். உள்ளாட்சி அமைப்புகளில் அடையாள அட்டைகளை தூய்மைப் பணியாளா்களுக்கு விரைவாக வழங்க அறிவுறுத்தினாா்.

நல வாரியத் தலைவா் பின்னா் கூறியது: தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் தர வேண்டும். தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு அவா்களுக்கும் நல வாரிய அட்டை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனியாா் தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்கள் என பல்வேறு தளங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களை கண்டறிந்து அவா்களுக்கும் அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்கள் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் கலந்து கொண்டு முழுஉடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.