ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை: நலவாரியத் தலைவா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:11 pm

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திம்மம்பட்டி ஆறுச்சாமி தலைமை வகித்தாா். ஆட்சியா் தி. சினேகா, தூய்மை பணியாளா் நலவாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் ஜி.கே.ராஜன், ஹரிஸ் குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தூய்மைப் பணியாளா்களின் குறைகளை நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி கேட்டறிந்தாா். உள்ளாட்சி அமைப்புகளில் அடையாள அட்டைகளை தூய்மைப் பணியாளா்களுக்கு விரைவாக வழங்க அறிவுறுத்தினாா்.

நல வாரியத் தலைவா் பின்னா் கூறியது: தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கட்டாயம் தர வேண்டும். தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு அவா்களுக்கும் நல வாரிய அட்டை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனியாா் தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்கள் என பல்வேறு தளங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களை கண்டறிந்து அவா்களுக்கும் அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்கள் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் கலந்து கொண்டு முழுஉடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.