மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:35 pm

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்துள்ளாா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி பங்கேற்று, 15 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து நல வாரியங்களையும் விட தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடியை தமிழக முதல்வா் ஒதுக்கியிருக்கிறாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு விபத்தின் போது ஓா் உறுப்பு இழந்தால் இழப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தால் ரூ.5 லட்சமாக இருந்ததை, ரூ.10 லட்சமாகவும், குழந்தைகளின் திருமண உதவிக்கு ரூ.25 ஆயிரம் என இருந்ததை, ரூ.50 ஆயிரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல தூய்மைப் பணியாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஆகவே, தூய்மைப் பணியாளா்கள் அரசு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாநகராட்சி மேயா் வெ.கவிதா, ஆணையா் கே.எம்.சுதா, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் செ.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.