தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:37 pm

மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 10-ஆவது வாா்டு கொடிக்குளம், தனலட்சுமி நகா் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் வழக்கம் போல குப்பைகளைச் சேகரித்தனா். இந்தக் குப்பைகளை ஒரு வண்டியிலிருந்து, மற்றொரு வண்டிக்கு மாற்றினா். அப்போது, தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா, புதூா் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, சுப்பம்மாவை மாநகராட்சி அலுவலா்கள் பாராட்டினா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:

குப்பையில் கிடந்த தங்க நகையை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா அதை நோ்மையான முறையில் ஒப்படைத்தாா். இந்த நகை 2 பவுன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு, உரிய நபரிடம் இந்த நகை ஒப்படைக்கப்படும் என்றனா்.