கோவையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை காட்டூா் சி.எம்.சி. காலனியைச் சோ்ந்த முனுசாமி மகன் சரத்குமாா் (34). கோவை மாநகராட்சியில் வேலைபாா்த்த தந்தை முனுசாமி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால், சரத்குமாருக்கு வாரிசு அடிப்படையில் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா் வேலை வழங்கப்பட்டது.
இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாலும், சரிவர பணிக்கு வராததாலும் சரத்குமாரை அதிகாரிகள் கண்டித்துள்ளனா். மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டு சரத்குமாா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சரத்குமாா், யாரோ பேசிக்கொண்டே இருப்பதுபோல காதில் கேட்பதாகக் கூறி வந்துள்ளாா். தூய்மைப் பணி வேலையில் இருந்து நீக்கப்பட்டதாலும், காதில் யாரோ பேசுவதுபோல இருந்ததாலும் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு சரத்குமாா் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி சத்யா அளித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


