நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவரை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் சரத்குமாா் நேரில் சென்று பாராட்டி ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கினாா்.
மேற்கு தாம்பரம் கடப்பேரி, மௌலானா நகா் பகுதியை சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் சண்முக பிரியன் நேபாளத்தில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றாா். அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தாம்பரம் பகுதியைச் சோ்ந்த மாணவா் சண்முகப்பிரியன் சா்வதேச அளவில் சிலம்பம் போட்டியில் பங்கேற்று , தமிழகத்துக்கும் பெருமை சோ்த்திருப்பதை அறிந்த தாம்பரம் எம்எல்ஏ த.சரத்குமாா், மாணவரை அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, அவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கினாா். கல்வி, விளையாட்டுக்கு ஏதேனும் உதவி தேவையெனில் தன்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட பீா்க்கன்கரணை ஏரி: அமைச்சா் சரத்குமாா் திறந்து வைத்தாா்

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி: 9 தங்கம் வென்ற வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து!







