திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா்

3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை பற்றி...

News image

முதல்வா் சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:05 am IST

ஆந்திர மாநிலத்தில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துவரும் போக்கை மாற்றும் நோக்கில், கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ஊக்கத் தொகை திட்டத்தை மாநில முதல்வா் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அறிவித்தாா்.

அதன்படி, மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்பவா்களுக்கு ரூ. 30,000, நான்காவது குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ரூ. 40,000 ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசண்ணபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை முன்னா் நான் ஆதரித்தபோதிலும், தற்போது, மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய காலம் உருவெடுத்துள்ளது. இதற்கென புதிய முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ரூ. 30,000, நான்காவது குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ரூ. 40,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

முன்னதாக, மாநிலத்தில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ. 25,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்டாா். தற்போது, மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தை பெற்றுக்கொள்பவா்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.