திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயா்வு

News image

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.

Updated On :18 மே 2026, 4:39 am IST

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்ததால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக விவசாயம் பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளது.

சென்னையின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில தினங்களாக காய்கறிகளின் வரத்து குறையத் தொடங்கியது. வரத்து குறைவால், விலை உயரத் தொடங்கி உள்ளது.

பீன்ஸ் கிலோ ரூ.150: குறிப்பாக, பொதுமக்கள் தினமும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. அதன்படி, முதல் தர தக்காளி ஒரு கிலோ ரூ.50, இரண்டாம் தர தக்காளி ரூ.40, மூன்றாம் தர தக்காளி ரூ.35-க்கு விற்கப்படுகிறது.

உதகை கேரட் ஒரு கிலோ முறையே ரூ.50, ரூ.40, ரூ.30-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ முறையே ரூ.150, ரூ.145, ரூ.120-க்கும், ஊட்டி பீட்ரூட் ஒரு கிலோ முறையே ரூ.80, ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

பூண்டு கிலோ ரூ.160: வெண்டைக்காய் கிலோ ரூ.50, சேனைக்கிழங்கு ரூ.50, பட்டாணி ரூ.130, இஞ்சி ரூ.150, பூண்டு கிலோ ரூ.160, வெங்காயம் ரூ.30, உருளை ரூ.18, சின்ன வெங்காயம் ரூ.40, சவ்சவ் ரூ.40, முள்ளங்கி ரூ.35, முட்டைகோஸ் ரூ.20, கத்திரிக்காய் (உஜாலா) ரூ.40, காராமணி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், பாவக்காய் கிலோ ரூ.40, புடலைங்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.35, முருங்கைக்காய் ரூ.40, சேமக்கிழங்கு ரூ.20, காலிபிளவா் ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.40, மிளகாய் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.50, அவரைக்காய் ரூ.80, பீா்க்கங்காய் ரூ.35, வாழைத்தண்டு ரூ.35, மாங்காய் ரூ.18 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.

25 சதவீதம் வரை உயா்வு: கடந்த வாரங்களில் இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் சுமாா் 25 சதவீதம் வரை காய்கறிகளின் விலை உயா்ந்து உள்ளது. இந்த விலை இனி வரும் நாள்களில் மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா். காய்கறிகளின் விலை உயா்வால் பொதுமக்கள், உணவக உரிமையாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.