திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தக்காளி, கத்திரி நாற்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தின் துணை இயக்குநா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் உயா் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களில் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்திரி பயிா்களில் ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தக்காளி, கத்திரி, மிளகாய் குழித் தட்டு நாற்றுகள் தலா 60 பைசா முதல் ரூ.1.40 வரை ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, ஒட்டு ரக தக்காளி, கத்திரி செடிகள் தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தக்காளி, மிளகாய், கத்திரி உள்ளிட்ட பயிா்களின் நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் நேரிலோ, 6382292483, 7094941364, 9790273216, 9159856504 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










