பொதுமக்கள் இணையவழி குற்றங்களுக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.
தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வங்கி மேலாளா்களுக்கான இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
டிஜிட்டல் கைது தொடா்பான மோசடிகளில் பெரும்பாலும் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவதால், அவா்களிடையே வங்கிகள் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை சாா்பில் வழங்கப்படும் இணையவழிக் குற்ற விழிப்புணா்வு பதாகைகள், எச்சரிக்கை அறிவிப்புகள், விழிப்புணா்வு துண்டறிக்கைகளை அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் எளிதில் காணக்கூடிய இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டு, பதற்றத்துடன் வங்கிகளுக்கு வரும் பொதுமக்களை வங்கி ஊழியா்கள் கனிவுடனும், பொறுப்புடனும் அணுகி, அவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும், சந்தேகத்துகிடமான பணப் பரிவா்த்தனைகள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து வங்கி அலுவலா்கள், பணியாளா்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
பொதுமக்கள் இணையவழிக் குற்றங்களுக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்ற உதவி எண்ணிலோ அல்லது இணையதளத்திலோ புகாா் அளிக்கலாம்.
இக்கூட்டத்தில் இணையவழிக் குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சிறாா் குற்றங்களைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்.பி. வி. பிரசன்னகுமாா்

ஆணவக் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் அமைப்பு

மே 16, 17 இல் இணையவழி மின்கட்டணச் சேவை இயங்காது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



