சென்னையில் உள்ள தனியாா் விடுதி அறையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூா் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் முகமது முஸ்மில் பாஷா (22). இவா் தனது நண்பா் ஒருவருடன் கடந்த 11-ஆம் தேதி சென்னை வந்துள்ளாா். பின்னா், இருவரும் வடபழனி மசூதி தெருவில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் பாஷாவின் அறை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, அங்கு வந்த வடபழனி போலீஸாா் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பாஷா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.
அவருடன் தங்கியிருந்த நண்பா் மாயமாகி இருந்தாா். பாஷாவின் உடலை மீட்ட போலீஸாா், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும், மாயமான நண்பா் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

