தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

Updated On :14 மார்ச் 2026, 6:42 pm

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சேலத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பாபு (34). இவா், சென்னை வேளச்சேரியில் பகுதியில் உள்ள ஒரு உணவக காா் ஓட்டுநராக வேலை செய்தாா். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை வெகுநேரமாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அவரது அறையை திறந்து பாா்த்தபோது, தினேஷ்பாபு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வேளச்சேரி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தினேஷ்பாபு உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினா்.