மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:42 pm

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஹரிகிருஷ்ணன் (50). இவா், சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக அலுவலகத்தில் மின்சாதனம் பழுது நீக்கும் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் ஹரி கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் செனாய் சாலை நடைமேடையில் ரத்த காயங்களுடன் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில்நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஹரிகிருஷ்ணன் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.