தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:58 pm

அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் கல்லூரி மாடியில் இருந்து இளைஞா் ஒருவா் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுப்பாளையம் கிராமத்தில் செயல்படும் தனியாா் பொறியியல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கல்லூரியில் பாதுகாவலரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்நிலையில், அவருக்குத் தெரியாமல் கல்லூரிக்குள் நுழைந்த முனியங்குறிச்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான புண்ணியமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (26), 3 ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற அரியலூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.