போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞரை, சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
சமூக வலைதளத்தில் இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட பதிவு:
மே 17 இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், உணா்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவா திலீபனையும், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணா்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிவா திலீபன் நலம் பெற அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசிக பிரசார கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: திருமாவளவன் ரூ.5 லட்சம் நிதியுதவி

இஸ்லாமியா்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நெல்லை வேட்பாளா் சந்திப்பு

கரூரில் திமுக முன்னாள் எம்.பி.யிடம் முதல்வா் நலம் விசாரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


