15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கரூரில் திமுக முன்னாள் எம்.பி.யிடம் முதல்வா் நலம் விசாரிப்பு

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

News image

கரூரில் புதன்கிழமை திமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமியை சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:50 pm

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் புதன்கிழமை காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் கரூருக்கு காலை 11.45 மணிக்கு வந்தாா். அப்போது, அவா் கரூா் மக்களவை முன்னாள் உறுப்பினரும், திமுகவின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் இருந்த கே.சி. பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது மேற்கு மண்டல திமுக பொறுப்பாளா் வி. செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.